search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கடற்படை- எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    இந்திய கடற்படை- எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வி பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
    • நிகழ்ச்சியில் ஆலோகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    இந்திய கடற்படை அலுவலர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்.டி. பட்டபடிப்பு வழங்கவும், எஸ்.ஆர்.எம். மாணவர்கள், பேராசிரியர்கள் கடற்படை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் இந்திய கடற்படை, கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, காட்டங்குளத்தூர் எஸ். ஆர். எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவு ரியர் அட்மிரல் பி. சிவகுமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர். எம். மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், பதிவாளர் சு. பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் டி. மைதிலி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் பேராசிரியர் வி. பி. நெடுஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×