search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சுதந்திர தின விழா
    X

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சுதந்திர தின விழா

    • ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி யின் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர் வெற்றிவேல் செல்வம் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் பொது மக்களி டமும், கல்லூரி மாணவர்களிடமும், தேசப்பற்றை ஊட்டு வதற்காக அரூர் காவல் நிலையத்திற்கு அருகிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், தேசப்பற்று மிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    இதில் மாணவர்கள் தேசப்பற்று மிக்கப் பாடல்கள் பாடியும், சொற்பொழிவுகள் ஆற்றியும், நாடகம் மூலம் நடித்தும் தங்கள் தேசப்பக்தியை வெளிப்படுத்தினர். மேலும் மாணவர்கள் அரூர் பொதுமக்களிடம் 5000 தேசிய கொடியை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

    மேலும் பள்ளி வளாகத்தில் மழலை மாணவர்கள் தேசப்பற்று மிக்க பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    Next Story
    ×