search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் அதிகாரிகள் துணையுடன் கனரக பயன்பாடு அதிகரிப்பு
    X

    கொடைக்கானலில் தடைசெய்யப்பட்ட எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் அதிகாரிகள் துணையுடன் கனரக பயன்பாடு அதிகரிப்பு

    • கொடைக்கானலில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜே.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக எந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது.
    • அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கான லில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜே.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக எந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

    அதிகாரி களிடம் அனுமதி பெற்ற பின்னரே குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இந்த எந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக வணிக பயன்பா ட்டிற்காக மலைகளை உடைத்து சட்டவிரோத செயல்களுக்கும் கனரக வாகனங்களான ஜே.சி.பி., ஹிட்டாச்சி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி , பள்ளங்கி மற்றும் நகர்ப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜே.சி.பி., ஹிட்டாச்சி ஆகிய கனரக வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் வெடிவைத்து பாறைகள் உடைக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    எனவே கொடைக்கானலில் ேஜ.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தடையை மீறி இயக்குபவர்கள் மீது காவல்துறை மூலம் நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×