என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு
    X

    தருமபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு

    • 2,707 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,115 கிலோவாக அதிகரித்தது.
    • மொத்தம் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 339-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு க்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,707 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,115 கிலோவாக அதிகரித்தது. இதேபோல் பட்டுக்கூட்டின் விலையும் அதிகரித்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.437-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.55 விலை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.492 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.241- க்கும், சராசரியாக ரூ.367.62-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 339-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    Next Story
    ×