என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்கள் விற்பனை அதிகரிப்பு
    X

    பூக்கள் விற்பனை அதிகரிப்பு

    • பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கின்றன.
    • அனைத்து கோவில்களிலும் சிறப்பு மலர் அலங்காரம்

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாளை ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி பொதுமக்கள், பெண்கள் இன்று அதி காலை முதலே சேலம் மார்க்கெட்டுக்கு வந்து பூக்கள் வாங்கிச் சென்று வருகின்றனர். அனைத்து கோவில்களிலும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு விசேஷ பூஜைகள் நடை பெறும். விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பூக்கள் தேவை அதிகரித்து உள்ளதால், குண்டு மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.800- ரூ.1000- க்கு விற்ற குண்டு மல்லிகை இன்று ரூ. - 1400 க்கு விற்றது. ரூ1000- க்கு விற்ற முல்லை ரூ.1400- க்கு விற்கப்படுகிறது.மற்ற ரக பூக்களில் ஒரு சில விலை உயர்ந்தும், , சில ரகங்கள் அதே விலையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (31.12.22) பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) : குண்டு மல்லிகை - ரூ.1400, முல்லை - ரூ.1400, ஜாதி மல்லி - ரூ.900, காக்கட்டான் - ரூ.450, கலர் காக்கட்டான் - ரூ.450, மலை காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.100, சம்பங்கி - ரூ.60, சாதா சம்பங்கி - ரூ.60, அரளி - ரூ.160, வெள்ளை அரளி - ரூ.160, மஞ்சள் அரளி - ரூ.160, செவ்வரளி - ரூ.200, ஐ.செவ்வரளி - ரூ.200, நந்தியா வட்டம் - ரூ.100 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×