search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கையில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு-விவசாயிகள் கவலை
    X

    முருங்கையில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு-விவசாயிகள் கவலை

    • பூச்சிகள் சாப்பிட்டு வருவதால் பெரும்பாலான மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன
    • முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    தாராபுரம் :

    மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கும் தை மாதத்தில் முருங்கை மரம் பூத்துக் குலுங்கும். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடைக்கு வரும். ஆனால் தற்போது முருங்கையில் பூச்சி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதன் இலை, தழை, பூ என அனைத்து பாகங்களையும் பூச்சிகள் சாப்பிட்டு வருவதால் பெரும்பாலான மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன.

    மருந்து தெளித்தாலும் அவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. பூச்சிகள் வீரியம் பெற்று மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சீசன் காலத்தில் முருங்கை அறுவடைக்கு வருவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    Next Story
    ×