என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நத்தத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை அதிகரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!
நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம்:
நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பிஸ்கட்டுகள், இனிப்புகள், மிக்சர் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளில் உற்பத்தி தேதி, காலாவதியான தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை.
இப்பகுதியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு பணியில் ஈடுபடவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதனால் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதாக தெரியவில்லை. எனவே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து காலாவதியான பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story