search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே தொடர் மழை: செடியிலேயே அழுகும் பூக்கள்-விவசாயிகள் வேதனை
    X

    மழையால் செடியிலேயே அழுகிய செவ்வந்தி பூக்கள்.

    போடி அருகே தொடர் மழை: செடியிலேயே அழுகும் பூக்கள்-விவசாயிகள் வேதனை

    • மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
    • செடியிலேயே அழுகி வருவதால் வேதனையடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையின்போது ஒட்டுசெவ்வந்தி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. 2-ம் ரக செவ்வந்தி பூக்கள் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால் பெரும்பாலான செவ்வந்தி பூக்கள் செடியிலேயே அழுகி வீணானது. மேலும் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முதல்ரக செவ்வந்தி ரூ.70 முதல் ரூ.80 வரையும், 2-ம் ரகம் ரூ.40 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இந்த விலை பறிப்புகூலிக்குகூட பத்தவில்லை. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.

    Next Story
    ×