என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி பகுதியில் தொடர் மழையால் மலையில் இருந்து அருவி போல வழிந்தோடும் மழை நீர்
- மழை நீர் நிரம்பி பாறைகளின் மீது வழியும். இது காண்பதற்கு அருவி போல காட்சி தரும்.
- தொடர் மழை பெய்தால் பல நாட்களுக்கு அருவி போல தண்ணீர் கொட்டும்.
சூளகிரி,
காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிநெடுஞ்சாலையில் சூளகிரி ஒரமாக அமைந்துள்ள மலை அவ்வழியாக பயணம் செய்வோரின் கவனத்தை கவரும்.இந்த மலைக்கு பழமையான வரலாறு உள்ளது. இந்த மலையின் மேற்பரப்பில் சிறிய பெரிய பள்ளங்கள் உள்ளதால் கன மழை பெய்தால் இந்த பள்ளங்களில் மழை நீர் நிரம்பி பாறைகளின் மீது வழியும். இது காண்பதற்கு அருவி போல காட்சி தரும்.
தொடர் மழை பெய்தால் பல நாட்களுக்கு அருவி போல தண்ணீர் கொட்டும். தற்போது அந்த அருவியை தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
Next Story






