search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் பூவம் அரசு தொடக்க பள்ளியில்  ஸ்மார்ட்-கணினி வகுப்பறை திறப்பு
    X

    அரசு தொடக்க பள்ளியில், ஸ்மார்ட் மற்றும் கணினி வகுப்பறையை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தார்.

    காரைக்கால் பூவம் அரசு தொடக்க பள்ளியில் ஸ்மார்ட்-கணினி வகுப்பறை திறப்பு

    • காரைக்கால் பூவம் அரசு தொடக்க பள்ளியில் ஸ்மார்ட்-கணினி வகுப்பறை திறக்கப்பட்டது.
    • நூலக வசதி, மாணவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஆகியவை அமைந்துள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்துள்ள பூவம் அரசு தொடக்க பள்ளியில், தனியார் தொழிற்சாலை பங்களிப்புடன், ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மற்றும் கணினி வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. இதனை, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார்.

    இப்பள்ளியின் சிறப்பு அம்சமாக, கணினி வழி கல்வி மற்றும் இ.கணெக்ட் மூலம் கற்றல் கற்பித்தல் மற்றும் நூலக வசதி, மாணவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஆகியவை அமைந்துள்ளன. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், வட்ட ஆய்வாளர் பொன்.சவுந்தர ராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×