என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் வீட்டுவசதி வாரிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு
- வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலக புதிய கட்டிடம், 14,800 சதுர அடியில், ரூ.5 கோடியே 30 லட்சத்து 70,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
- ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாகலூர் சாலை திட்டப் பகுதி 3 -ல், ரூ.5 கோடியே 30 லட்சத்து 70,000- மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலக கட்டிடம் மற்றும் ஓசூர் சிப்காட் தீயணைப்பு மீட்பு பணிநிலையம் தரம் உயர்த்தப்பட்டதையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் குத்துவிளக்கேற்றி அலுவலக வளாகத்தை பார்வையிட்டார்.
விழாவிற்கு, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா, வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: இந்த வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலக புதிய கட்டிடம், 14,800 சதுர அடியில், ரூ.5 கோடியே 30 லட்சத்து 70,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இதில் தூண் தாம் முதல் தளம் 1,400 சதுர அடி மற்றும் இரண்டு தளம் 7,400 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல் தளம் அலுவலக வாடகை உபயோகத்திற்கும், 2-வது தளம் அலுவலக உபயோகத்திற்கு ஏற்ப சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு அரங்கு கனிணி பிரிவு, பதிவறை, உணவருந்தும் அறை மற்றும் கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு, கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையம் தரம் உயர்த்தப்பட்டதால், கூடுதலாக 1 தீயணைப்பு வாகனம் மற்றும் 12 பணியாளர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் இந்த நிலையத்திற்கு கிடைக்கும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மாது, ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளர் சுதீர், உதவி பொறியாளர் செந்தமிழ்செல்வி, தாசில்தார் சுப்பிரமணி, , மற்றும் வீட்டுவசதி பிரிவு அலுவலர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






