என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வார விழாவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கியில் 69-வது கூட்டுறவு வார தொடக்க விழா
தொடர்ந்து கூட்டுறவு உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று அனைத்திந்திய 69-வது கூட்டுறவு வார தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவு கொடியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்றி வைத்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டுறவு உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, பொதுமேலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






