என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
வத்தலக்குண்டுவில் சத்துணவு ஊழியர் சங்க தொடக்க விழா
- வட்டாரத் தலைவர் கொடியேற்றி வைத்து தமிழக அரசு அறிவித்த காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக வழங்க வேண்டும் என பேசினார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் சத்துணவு ஊழியர் சங்கத்தின்32-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய கொடியேற்றி இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் செல்வம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து தமிழக அரசு அறிவித்த காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக வழங்க வேண்டும் என பேசினார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
சத்துணவு ஊழியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சக்தி வடிவேல் முருகன் வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உதயகுமார் இந்திராணி, மேலாளர் மகாராஜன், நிர்வாகிகள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், சிவக்குமார் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செல்வராணி நன்றி கூறினார்.






