search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டியில்  ஏரி-குளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விக்கிரவாண்டியில் ஏரி-குளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

    • விக்கிரவாண்டியில் ஏரி-குளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி மாணவர்களின் மாரத்தான் ஓட்டத்தையும், மாணவிகளின் சைக்கிள் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டியில் ஏரி, குளம் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளின் மாரத்தான் மற்றும் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி மாணவர்களின் மாரத்தான் ஓட்டத்தையும், மாணவிகளின் சைக்கிள் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை , துணை தலைவர் பாலாஜி, கவுன்சிலர் சுதாபாக்கியராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூராட்சி உதவியாளர் தீனா,பள்ளி மாணவ-மாணவிகள்,பணியாளர்கள் பங்கேற்றனர். விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேர்மன் அப்துல் சலாம் துவக்கி வைத்தார். அருகில் செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×