என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவிலில் பெண்ணுக்கு கொரோனா
- கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
- பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி வெள்ளாத்தான்கரைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு காய்ச்சல் ,சளி இருந்தது.உடனே அவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் ரத்தப் பரிசோதனை கூட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வீட்டிலேயே அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story






