என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரையில்   இரும்பு தகடு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
    X

    லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    ஊத்தங்கரையில் இரும்பு தகடு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

    • லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • இந்த சாலை அதிக வளைவுகளை கொண்ட சாலை என்பதால் இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் அதிகம் காணப்படுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கலைஞர் நகர் பகுதியில் இரும்பு தகடுகள் ஏற்றி வந்த லாரி வளைவு பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். இந்த லாரி சேலம் உருக்கு ஆலையில் இருந்து சட்டீஸ்கர் மாநில ஆலைக்கு சென்றது. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் என கூறுகின்றனர்.

    வாணியம்பாடி முதல் அயோத்தியாப்பட்டணம் வரை நான்கு வழி சாலை வேலைகள் நடந்து வரும் சூழ்நிலையில் ஏ. பள்ளிப்பட்டி வரை இந்த சாலையின் வேலை முழுமையாக முடிவடைந்து உள்ளது.

    இந்த சாலை அதிக வளைவுகளை கொண்ட சாலை என்பதால் இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் அதிகம் காணப்படுகிறது. அதனாலேயே இதுபோன்ற விபத்து கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுபோன்ற ஆபத்தான விளைவுகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×