search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்ய உதவும் வெற்றிக்கு வழி நிகழ்ச்சி - நாளை மறுநாள் நடக்கிறது
    X

    தூத்துக்குடியில், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்ய உதவும் வெற்றிக்கு வழி நிகழ்ச்சி - நாளை மறுநாள் நடக்கிறது

    • தூத்துக்குடி ஹோலி கிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி- சி.பி. ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் ‘வெற்றிக்குவழி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் நாளை மறுநாள் (22-ந் தேதி) இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி- சி.பி. ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களின் எதிர்காலத்தி ற்கு சரியான உயர் கல்வியை தேர்வு செய்ய தமிழகத்தின் சிறப்பான கல்வியாளர்களை கொண்டு 'வெற்றிக்குவழி' என்ற நிகழ்ச்சி நடத்தப்படு கிறது.

    தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் நாளை மறுநாள் (22-ந் தேதி) இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மாணவர்கள் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் அடுத்தக்கட்ட மாக எந்த வகையான உயர்கல்வியை தேர்ந்தெடு க்கலாம் என்பது குறித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு ஹோலி கிராஸ் என்ஜினீயரிங் கல்லூரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×