search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை
    X

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
    • சிறந்த மதிப்–பெண் பெற்ற மாணவ-மா ண–வி–களை பள்ளி தாளாளர் மணிமா–றன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 616 மாணவ-மாணவிகளில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பே ரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 மாணவ-மாணவிகளும் பெற்றனர்.

    அதேபோல் கணித பாடத்தில் 12 பேர், வேதியியலில் 17 பேர், இயற்பியலில் 4 பேர், உயிரியலில் 2 போ், கணினி அறிவியலில் 8 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவர், கணக்குப்பதிவியலில் 2 பே ர் என மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவி ஜான்சிராணி 600-க்கு 589, மாணவர்கள் ராம்குமார்-588, சாய்கணேஷ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்பொழுது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×