என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகர 14-வது வார்டு பகுதியில்  தி.மு.க. சார்பில்  நலத்திட்ட உதவிகள்
    X

    ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    ஓசூர் மாநகர 14-வது வார்டு பகுதியில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

    • கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டது.
    • நலத்திட்ட உதவிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா வழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓசூர் 14-வது வார்டுக்குப்பட்ட லட்சுமிநாராயணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், மாநகர பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறுவர்,சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×