என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்தது
    X

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்தது

    • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 67லட்சத்து 33ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.
    • வயது வாரியாக பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67.33 லட்சமாக உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவ ரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 67லட்சத்து 33ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஆண்கள் 31லட்சத்து 34ஆயி ரத்து 644 பேரும், பெண்கள் 35லட்சத்து 98ஆயிரத்து 639பேரும், மூன்றாம் பாலினத்தவர் 277 பேரும் ஆவர்.வயது வாரியாக பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 17லட்சத்து 92ஆயிரத்து 383 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள் 28லட்சத்து 65ஆயிரத்து 95பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 36ஆயிரத்து 780 பேரும், 46வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்க ளின் எண்ணிக்கை 2 லட்சத்து 33ஆயிரத்து 372 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×