search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி பகுதியில்தக்காளி விலை கடும் வீழ்ச்சி
    X

    சூளகிரி பகுதியில்தக்காளி விலை கடும் வீழ்ச்சி

    • தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் நிலங்களில் மாடுகளை விட்டு மேய்க்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சூளகிரி வட்டார பகுதியில் தக்காளி செடிகளை அதிக அளவில் பயிர் செய்து உள்ளனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    இதனால் தக்காளி பறிப்பு கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் நிலங்களில் மாடுகளை விட்டு மேய்க்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    Next Story
    ×