என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காரப்பேட்டை பெரிய ஏரியில்   பெண் சடலம் மீட்பு
    X

    சிங்காரப்பேட்டை பெரிய ஏரியில் பெண் சடலம் மீட்பு

    • தீயணைப்பு துறையினர் பெரிய ஏரியில் உள்ள பெண்ணின் உடலை மீட்டனர்.
    • விசாரணை மேற்கொண்டதில் திரு வண்ணாமலை மாவட்டம் புது தெரு பகுதியைச் சேர்ந்த சுமதி (வயது55) என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் உள்ள பெரிய ஏரியில் பெண் சடலம் இருப்பதாக சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பெரிய ஏரியில் உள்ள பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணை மேற்கொண்டதில் திரு வண்ணாமலை மாவட்டம் புது தெரு பகுதியைச் சேர்ந்த சுமதி (வயது55) என்பது தெரியவந்தது.

    சுமதிக்கு 3 மகள் உள்ள தாகவும், இவர் 10 நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தனது மூன்றாவது பெண் லேகா உடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய தில் மனவேதனை அடைந்த சுமதி அரசு மருத்துவமனையில் இருந்து சிங்காரப்பேட்டை வந்து பெரிய ஏரியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×