search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொதிக்கும் சாயநீர் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
    X

    கொதிக்கும் சாயநீர் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

    • தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கருங்கல்பட்டி, இந்திரா நகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).

    இவர் தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று வேலையில் இருந்த போது, பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்ன–தானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×