search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரபட்டியில்  1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை
    X

    பாப்பாரபட்டியில் 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை

    • லலிதா சகஸ்ர நாம ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • காமாட்சி அம்மன், ஏகாம்பரம் நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மனுக்கு 1008 பெண்கள் கலந்து கொள்ளும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது.

    முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், லலிதா சகஸ்ர நாம ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் காமாட்சி அம்மன், ஏகாம்பரம் நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 பெண்கள் கலந்து கொள்ளும் மாங்கல்ய பூஜை 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண் களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×