என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் வாபஸ் -8 நாட்களுக்கு பிறகு ஊருக்குள் திரும்பினர்
- அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
- இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.
தேன்கனிக்கோட்டை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.
குவாரிக்கு வரும் வாகனங்களால் சாலைகள் சேதமடைகிறது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குவாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கொரட்டகிரி கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி னர்.
இதனிடையே கடந்த 11-ந்தேதி ஊரை காலி செய்து குழந்தைகள், மூட்டை முடிச்சுகள் மற்றும் கால்நடைகளுடன் காலி செய்து அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
அதிகாரிகள், போலீசார் கிராம மக்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் நேற்று 8-வது நாளாக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கிராமத்திற்கு திரும்பினர் இந்தநிலையில் அங்கு வந்த குவாரி மற்றும் கிரசர் ஓனர் பெடரேசன் தலைவர் சம்பங்கி, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ், தனி தாசில்தார் சரவணன் ஆகியோர் நேற்று மாலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாற்று வழியில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.
போலீசார் கிராமமக்களை பாதுகாப்புடன் கிராமத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கடந்த 8 நாட்களாக நடந்த கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்