என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தகராறில்   அண்ணனை கொன்ற தம்பி கூட்டாளியுடன் கைது
    X

    நிலத்தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கூட்டாளியுடன் கைது

    • நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
    • இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி யாரப் நகர் மசூதி தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் முரளி (வயது 37). ஆட்டோ ஒட்டி வந்தார்.

    இவருக்கும் அவரது தம்பி தேவராஜ் (வயது 35), என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே மர்ம நபரால் முரளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முரளியின் தாய் கீதாம்மாள் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார்.

    கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் நிலப்பிரச்னை காரணமாக அவரது தம்பி தேவராஜ் , தனது நண்பரான சின்ன மேனகரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×