என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர், பந்தலை அ.தி.மு.க துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார்.
மத்தூரில் அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- மத்தூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் அதிமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் தண்ணீர், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
- விழாவிற்கு மத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் அதிமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் தண்ணீர், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக கழக துணை பொது செயலாருமான கே.பி.முனுசாமி தண்ணீர், நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், பழரசங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி ஒன்றிய இணைச் செயலாளரும் களர்பதி ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயந்தி புகழேந்தி, சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜகான், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மனோகரன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடி சுந்தரவடிவேல், ஆனந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா சிலம்பரசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் மணிவண்ணன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா சுந்தரேசன், சின்னபாப்பா நடராஜன், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் எம்.ஆர்.முனுசாமி, இளைஞர் அணி கே முருகன் , இளம் பாசறை பாண்டியன், தகவல் துட்ப பிரிவு பூபதி , சிவராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






