என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மளாபுரம் கிராமத்தில்உள்ள    கவுரம்மாதேவி கோவில் தேர் திருவிழா
    X

    கும்மளாபுரம் கிராமத்தில்உள்ள கவுரம்மாதேவி கோவில் தேர் திருவிழா

    • கவுரம்மா தேவி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது,
    • அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் திறக்கப்படும்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கும்மளாபுரம் கிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் அருகில் உள்ள கவுரம்மா தேவி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது,

    ஆண்டு ஆண்டு காலமாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் மற்றும் கவுரம்மா தேவி தேர் திருவிழாவையொட்டி கடந்த வினாயகர் சதுர்த்தி நாளில் கோயில் திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன.

    நவராத்திரி முதல் நாளில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற திருவிழாவில் வினாயகர் மற்றும் கவுரம்மா தேவிக்கு தனிதனியாக தேர் அமைத்து 120 பேர் தேரை சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் வந்தனர்.

    பிறகு அருகில் கவுரம்மா ஏரியில் முதலில் விநாயகரையும் பிறகு கவுரம்மா தேவி சிலைகளை தண்ணீரில் கரைத்தனர். இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு. இந்த கிராமத்தில் 101 ஏரிகள்,101 குளங்கள் ,101 கோயில்கள் , 101 வில்வமரம், உள்ள இடம் என்று புராணத்தில் உள்ளது என்று ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    கவுரம்மா தேவி உருவத்தை களிமண்ணால் செய்து அலங்காரம் செய்து தங்கத்தாலி அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில்தேவியின் களி மண் சிலையை மூழ்கடித்தனர்.

    மூன்று நாள் கழித்து அம்மன் தேவி சிலை கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஏரியில் மேலே மிதக்கும். இந்த தாலியை எடுத்து அம்மன் சன்னிதானத்தில் வைத்து கோயிலை பூட்டி விடுவது வழக்கமாகும். இத்திருவிழாவில் மாடாதிபதிகள் மற்றும் பல கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மீண்டும் கோயில் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் திறக்கப்படும்.

    Next Story
    ×