என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வருவாய் நிலங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
- மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
- பல்வேறு வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மை செயலர் குமார்ஜெயந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நத்தம் சிட்டா திருத்தம், இணையதள பட்டா மாறுதல், இணையதள வாரிசு சான்று, வருவாய் துறை கட்டிடங்கள், இ-அடங்கல் மற்றும் மின் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
Next Story






