என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கார் மோதி செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனர் பலி
- பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜான் பிரபாகரன் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி இன்றுகாலை ஜான்பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்
தருமபுரி,
கிருஷ்ணகிரி ஹவுசிங் போடு ஆனந்த நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரபாகரன் (வயது56). இவர் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜான் பிரபாகரன் மீது மோதியது.
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை ஜான்பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






