search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  பெரியார் நினைவு தினம் அனுஷ்டிப்பு
    X

    கிருஷ்ணகிரியில் பெரியார் நினைவு தினம் அனுஷ்டிப்பு

    • தி.மு.க. அலுவலகத்தில், பெரியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
    • பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், பெரியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் தலைமை வகித்து, பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளருமான பரிதாநவாப், நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மற்றும் நிர்வாகிகள் பொன்.குணசேகரன், கனல் சுப்பிரமணி, தளபதி கோபிநாத், முருகேசன், ஜான்டேவிட், விஜய்ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பெரியார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×