search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

    • தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழை காக்கவில்லை என தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கே.எஸ். நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் தர்மலிங்கம், ஹரிகோட்டீஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்தி மொழியை கற்க அனுமதிக்காமல் எதிர்ப்பதாக தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழை காக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் பிற மாநிலங்களை போல மும்மொழி கல்வி கொள்கையை அனுமதிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் கோவிந்தராஜி, சங்கர், பொருளாளர் கிருஷ்ணன்,பா.ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×