search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  மோட்டார் சைக்கிள் திருடன் கைது
    X

    கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

    • இவர் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தை திருடியது கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 21 ) என்பது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பெரியார் நகரை சேர்ந்தவர் பாலாஜிகுமார். கொல்லி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.

    அந்த வண்டியை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் பாலாஜிகுமார் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பாலாஜிகுமாரின் இருசக்கர வாகனத்தை திருடியது கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 21 ) என்பது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

    இதையடுத்து சத்திய மூர்த்தியிடம் விசாரணை நடத்தி அவர் திருடிய மேலும் 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×