search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கூட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கூட்டம்

    • பாராட்டு விழா கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.
    • மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாநில பிரசார செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அழகிரிசாமி, மாநில செயலாளர் ஆறு.பக்கிரிசாமி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட வருவாய்த்துறை சங்க செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதே போல 24 மணி நேரமும் கிராமத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து வட்ட அளவில் தங்கி பணி செய்ய ஆவண செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வி தகுதி பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×