என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் 24-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் நடக்கிறது.
- கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






