என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
- வாசல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா பையனபள்ளி விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யா. இவர்கள் கடந்த மாத இறுதியில் வீட்டை பூட்டிவிட்டு சத்யாவின் பெற்றோர் ஊருக்கு சென்றுள்ளனர்.
ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வாசல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த 5 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
Next Story






