search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   விழிப்புணர்வு பேரணி
    X

    கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணி

    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
    • பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நேற்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின்சிக்கன வார விழாவினையட்டி, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணியானது புதிய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, ராயக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அடைந்தது. மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, கிருபானந்தம், இந்திரா, நிரஞ்சனா, உதவி இயக்குனர்கள் கந்தசாமி, தாசில்தார் சம்பத் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×