என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணி
- கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
- பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நேற்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின்சிக்கன வார விழாவினையட்டி, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணியானது புதிய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, ராயக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அடைந்தது. மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, கிருபானந்தம், இந்திரா, நிரஞ்சனா, உதவி இயக்குனர்கள் கந்தசாமி, தாசில்தார் சம்பத் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்