என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  358 உலமாக்கள், பணியாளர்களுக்கு ரூ.18.44 லட்சம் மதிப்பில் சைக்கிள்கள்  -அமைச்சர் காந்தி வழங்கினார்
    X

    கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், 358 உலமாக்கள், பணியாளர்கள் மற்றும் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் சைக்கிள்களை அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி மற்றும் பலர் உள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் 358 உலமாக்கள், பணியாளர்களுக்கு ரூ.18.44 லட்சம் மதிப்பில் சைக்கிள்கள் -அமைச்சர் காந்தி வழங்கினார்

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நேற்று மாலை நடந்தது.
    • ரூ.18 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்வி விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-

    தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மக்களுக்கு தையல் எந்திரங்கள், 4 சக்கர தள்ளு வண்டிகள், சிறுதொழில் செய்வதற்காக நலத்திட்ட உதவிகள், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத்திலுள்ள 358 உலமாக்கள், பணியாளர்கள் மற்றும் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல், மாவட்டத்தில் 2022&-23&ம் ஆண்டில் சிறுதொழில் செய்வதற்காக 118 முஸ்லிம் பெண்களுக்கு ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    2022-23 ம் ஆண்டில் 157 கிறித்துவ பெண்கள் சிறுதொழில் செய்வதற்காக ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டு வன், முருகன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×