என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் திடீர் மாயம்
- வெளியே செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.
- பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
வேலூர் மாவட்டம் டுறைப்படி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பிரபாகரன் (வயது 34). இவர் தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி அன்று அலுவலகத்தில் இருந்து வெளியே செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. அவரைப்பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பிரபாகரனின் தந்தி ராமலிங்கம் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் தந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ,மாயமான பிரபாகரனை தேடி வருகின்றனர்.
Next Story






