என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க நிகழ்ச்சி
- கிருஷ்ணகிரி நகராட்சியில் தூய்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சியில், நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப்த லைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் போது, நகராட்சி அலுவலகத்தில், உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 25-வது வார்டில் உள்ள தினசரி மார்கெட் பகுதியில் பொதுமக்களிடையே மக்கும்கு ப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பெங்களூரு சாலையில் துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வ கையில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் புதிய பஸ்நி லையத்தில் உள்ள பொது கழிப்பிடம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதியில்வா ர்டு எண்10 மற்றும் 11 பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளும்நி கழ்ச்சியும் நடந்தது.
இதை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மாதேஸ்வரன், சந்திரகுமார், கவுன்சிலர்கள்செ ந்தில்குமார், சுனில்குமார், பாலாஜி, முகமது ஆசிப், தேன்மொழி மாதேஷ், புவனேஸ்வரி, மதன்ராஜ், சக்திவேல்முருகன், மத்தீன், பிர்தோஸ்கான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கராமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






