search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவுகிறது.
    • ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் அலையிலும், 2-வது அலையிலும், 3-வது அலையிலும் ஏராளமான வர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 59 ஆயிரத்து 683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 59 ஆயிரத்து 290 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உள்ளது.

    Next Story
    ×