என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் விநாயகர், மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் புனரமைக்கப்பட்ட மகாசக்தி விநாயகர், மகாசக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி கடந்த 4-ம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது,
அதனை தொடர்ந்து புது விக்ரஹம் கரி கோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம், உள்ளிட்ட யாகங்கள் வளர்க்கப்பட்டு அக்னி ஆராதனம் செய்யப்பட்டு, கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது. இதனையடுத்து நூதன விக்கிரஹம் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்று தலும், திருமஞ்ச னம்,அபிஷேகம்,பூர்ணா ஹதி, யாகசாலை ஹோமம்
உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையிலிருந்து கும்பத்தை தலை மீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து விநாயகர் மற்றும் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டை ஊர் பொது மக்கள் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்