search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில்  மளிகை கடைக்காரர் வீட்டில்  பூட்டை உடைத்து கொள்ளை
    X

    காவேரிப்பட்டணத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

    • கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்.
    • வீட்டிற்குள் பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 2½ பவுன் தங்க நகைகள் கொள்ளை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் லட்சுமி நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தாேமாதரன் (வயது42). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 2½ பவுன் தங்க நகை உள்பட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×