என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
- சாலை பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புலிக்கல் பஞ்சாயத்தில் ரூ 48.34 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட தார் சாலை பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலையின் தரம் மற்றும் உயரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பொம்ம அள்ளி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பிடிஓக்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story