என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ7.50 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி
- ரூ 7.50 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் பணி தொடக்க விழா நடந்தது.
- பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் தலைமை வகித்து மழை நீர் வடிகால் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 15 வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பொது நிதியின் கீழ் ரூ 7.50 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் பணி தொடக்க விழா நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் டார்த்தி, துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் பிரியா சங்கர் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் தலைமை வகித்து மழை நீர் வடிகால் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், சுரேந்திரன், மாதப்பன், ரமேஷ், கீதா முத்துச்செல்வம், சிவக்குமார், சக்திரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் அன்பழகன் உட்பட பல கலந்து கொண்டனர்.
Next Story