என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீர் நிலை குட்டை அமைக்க பூமி பூஜையை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தொடங்கி வைத்தார்.
களர்பதி ஊராட்சியில் நீர் நிலை குட்டை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
- ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீர் நிலை குட்டை அமைக்கும் பணி.
- களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி பனங்காட்டு பகுதியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீர் நிலை குட்டை அமைக்க களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (வ ஊ )ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






