search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூரில்   புகையிலை பொருட்கள் விற்பனை   செய்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
    X

    அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்த போது எடுத்தபடம்.

    கடத்தூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

    • கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • புகையிலை விற்பனை செய்த கடையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி மூடி சீல் வைத்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா, மொரப்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவற்றை விற்பனை செய்த கடையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி மூடி சீல் வைத்தனர்.

    மேலும் கடத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இதுபோன்று தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

    Next Story
    ×