என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    ஓசூரில் மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து வாலிபர் பலி

    • வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற போதுகட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.
    • தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஓசூர்,

    பெங்களூர் பொம்ம சந்திராவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (19) மற்றும் மாதேவ்புராவை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் சிவரஞ்சன் (29) இருவரும் உறவினர்கள் அவர்.

    இவர்கள் கடந்த 14-ம் தேதி இரவு பெங்களுரில் இருந்து சொந்த ஊரான திருப்பத்தூருக்கு டூவீலரில் சென்றனர். வண்டியை, ஆகாஷ் ஓட்டினார். இந்தநிலையில், ஒசூர், மூக்கண்டப்பள்ளி ஹோட்டல் ஹில்ஸ் அருகே, ரோட்டில் மழைநீர் தேங்கி இருந்தது தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற போதுகட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

    இந்த விபத்தில் ஆகாஷ் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. சிவரஞ்சன் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனும திக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஓசூர்சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×