என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  ரூ.3 லட்சம் மதிப்புள்ள   குட்கா காரில் கடத்திய  2 பேர் கைது
    X

    ஓசூரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா காரில் கடத்திய 2 பேர் கைது

    • போலீசார் ஓசூர் ரிங்ரோடு கொத்தூர் ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் ரூ.3, 30,432- மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், 467.3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசாருக்கு குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ஓசூர் ரிங்ரோடு கொத்தூர் ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3, 30,432- மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், 467.3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் ரூ.2,683 மதிப்பிலான 48 மதுபாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. இவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரித்ததில், இவற்றை விற்பனைக்காக பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, கார் டிரைவர் மாலாராம் (வயது28) மற்றும் தினேஷ் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×