என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  லாரி மோதி மூதாட்டி பலி
    X

    ஓசூரில் லாரி மோதி மூதாட்டி பலி

    • தொரப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக புல்லட் வாகனம் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே நக்சம்மா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நக்சம்மா (வயது67). இவரது மகன் சீனிவாசு ஆகியோர் இருசக்கர வாகனம் புல்லட்டில் ஒன்னல்வாடி-பேரண்டப்பள்ளி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது தொரப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக புல்லட் வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நக்சம்மா உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×